மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவு

மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. "மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த வெயில் என்றால், மே மாதத்தில் எப்படி இருக்கும்?" என்ற பரவலான பேச்சு கோவை மக்களிடையே கேட்க முடிந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மாநகர பகுதிகளில் நேற்று மழை இல்லாத போதிலும், ஊரக பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று பெய்த மழை அளவின் படி மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழையும், பெரியநாயக்கன்பாளையத்தில் 26 மி.மீ மழையும், வால்பாறையை அடுத்த சின்கோனா மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



இதே போல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...