மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர் பலி: விளையாடும் போது நேர்ந்த சோகம்

கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை உப்பிலிபாளையத்தை அடுத்த ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் ஆர்.ஆர்.தர்ஷன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 110 குடியிருப்புகள் உள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் நரேன் கார்த்திகேயன். அதே குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் விஷால். 

இந்த இரு பள்ளி மாணவர்களும் நேற்று இரவு குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுமார் 8 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பந்து மைதானத்தின் ஓரத்தில் சென்றது. அதனை எடுக்கச் சென்ற விஷால் தவறுதலாக அங்கிருந்த மின் கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கியது. விஷாலின் அலறல் சத்தத்தை கேட்ட நரேன், அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரையும் மின்சாரம் தாக்கியது.

இதையடுத்து, அங்கு சென்ற குடியிருப்பு வளாக காவலாளி மின்சாரத்தை துண்டித்தார். மேலும், இது குறித்து இருவர் வீட்டிற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீட்டு பீளமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 



அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நரேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆபத்தான நிலையில் விஷாலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தில் மின்கசிவு இருந்ததும் கம்பத்தை சிறுவர்கள் தெரியாமல் பிடித்த போது மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

அக்கம்பத்தில் மின் கம்பத்தில் மின் கசிவு இருப்பதாக முன்னதாகவே குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அக்குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டிய நிலையில், வளாக உரிமையாளரான வர்ணாபூபதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...