உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வந்தது. பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

மேலும் பாதாள சாக்கடையில் இருந்து சாலைகளில் கழிவு நீர் வெளியேறியதால் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். படகு இல்ல சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தற்போது பெய்து வரும் மழையால் காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உதகை நகரின் மைய பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன் கோடப்மந்து கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வந்தது. பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

மேலும் பாதாள சாக்கடையில் இருந்து சாலைகளில் கழிவு நீர் வெளியேறியதால் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். படகு இல்ல சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தற்போது பெய்து வரும் மழையால் காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உதகை நகரின் மைய பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன் கோடப்மந்து கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
