ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.
நீலகிரி: ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இயேசு கிறிஸ்து உயிர் நீத்த மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறித்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர் நீத்த போது அவர் மக்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார். இந்த மாதத்தை கிறித்துவர்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர்.
இதனையொட்டி ஆண்டுதோறும் கிறித்துவர்களின் தவக்கால பரிகார பவனி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தென்னகத்தின் கல்வாரி என்றழைக்கப்படும் காந்தல் குருசடி திருத்தலம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவை சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலத்தின் போது இயேசுவின் பாடுகளை தியானித்தபடி சென்றனர். மேலும், இந்தாண்டு இறக்கத்தின் ஆண்டாக திருத்தந்தை அறிவித்துள்ளதால் இறைவனின் இறக்கத்தை அனைவரும் உணர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பரிகார பவனியின் நோக்கமாக உள்ளதாக மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. முடிவில் அன்பின் விருந்து நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உயிர் நீத்த மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறித்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர் நீத்த போது அவர் மக்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார். இந்த மாதத்தை கிறித்துவர்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர்.
இதனையொட்டி ஆண்டுதோறும் கிறித்துவர்களின் தவக்கால பரிகார பவனி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தென்னகத்தின் கல்வாரி என்றழைக்கப்படும் காந்தல் குருசடி திருத்தலம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவை சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலத்தின் போது இயேசுவின் பாடுகளை தியானித்தபடி சென்றனர். மேலும், இந்தாண்டு இறக்கத்தின் ஆண்டாக திருத்தந்தை அறிவித்துள்ளதால் இறைவனின் இறக்கத்தை அனைவரும் உணர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பரிகார பவனியின் நோக்கமாக உள்ளதாக மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. முடிவில் அன்பின் விருந்து நடைபெற்றது.
