பிரச்சனைகளைச் சரி செய்யாவிட்டால் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 



இந்த கூட்டத்தில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அவினாசி அத்திக்கடவு திட்டம் விரைந்து செயல்படுத்துவதோடு, மாவட்டத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை விரைந்து முடிக்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...