மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அவினாசி அத்திக்கடவு திட்டம் விரைந்து செயல்படுத்துவதோடு, மாவட்டத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை விரைந்து முடிக்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அவினாசி அத்திக்கடவு திட்டம் விரைந்து செயல்படுத்துவதோடு, மாவட்டத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை விரைந்து முடிக்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.