என்.ஐ.ஏ. பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது - மனித உரிமைகள் அமைப்பு

சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை செய்தது [பழிவாங்கும் நோக்குடையது என்று மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

கோவை: சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை செய்தது [பழிவாங்கும் நோக்குடையது என்று மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 



விசாரணையை முடிந்த பிறகும் சசிக்குமார் கொலை வழக்கில் கைதான நான்கு பேரின் வீடுகளில் சோதனை நடத்துவது சட்டவிரோத செயல். தேசிய பாதுகாப்பு முகமையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதால், அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். வழக்கு போடப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கைப் பதிவு செய்வதும் சட்ட விரோதமானது. 

தேசிய பாதுகாப்பு முகமை இந்த வழக்கை எடுத்து விசாரிக்க முகாந்திரமே கிடையாது. பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., போன்ற சில அமைப்புகளை தடை செய்ய தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற உள் நோக்கங்களின் அடிப்படையில் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்து விசாரித்து வந்ததது. சி.பி.சி.ஐ.டி விசாரணையை முடித்த பின்னர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) அதில் சேர்க்கப்பட்டது ஏற்புடையதல்ல. எச்.ராஜாவின் பேச்சு இறையாண்மைக்கு எதிராக தெரியவில்லையா? அவர் மீது ஏன் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு ஏன் வழக்கு பதியவில்லை?" என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...