சுல்தான் பேட்டையில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை சுல்தான் பேட்டை பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவை சுல்தான் பேட்டை பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட சுல்தான் பேட்டையில் புதிய காவல் நிலையத் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், "இன்று தொடங்கப்பட்டுள்ள இக்காவல் நிலையத்திற்கு 2 சார் ஆய்வாளர்கள், 2 தலைமைக் காவலர்கள், 4 கிரேடு 1 காவலர்கள், 22 கிரேடு 2 காவலர்கள் என 30 காவலர்கள் பணியாற்ற உள்ளனர். பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், செலகரச்சல், இடையர்பாளையம், போகம்பட்டி, வடவள்ளி, வாரப்பட்டி, மலைப்பாளையாம், எஸ்.குமாரபாளையம், பூராண்டம்பாளையம் ஆகிய 10 ஊராட்சிகளிலுள்ள 25 குக்கிராமங்கள் இக்காவல் நிலைய எல்லைக்குள் அடங்கும். இங்கு பணியாற்றும் காவலர்கள் தீர்வு நோக்கி வரும் மக்களை இன்முகத்துடன் விசாரித்து கனிவுடன் நடத்த வேண்டும்." என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணகராஜ், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பாரி, கோவை சரக காவல் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...