குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் 20-ம் தேதி கோவை வருகிறார்.
கோவை : குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் 20-ம் தேதி கோவை வருகிறார்.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர். நா. மகாலிங்கத்தின் 95-வது பிறந்த நாளையொட்டி, நாளை முதல் 23-ம் தேதி வரை நிறுவனர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில், 20-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார். அப்போது, கல்லூரியில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி மத்திய நூலகத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “ஞான சபை” எனும் தியான மையத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும், அருட்செல்வர் விருதினை ஜி.டி. டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.டி. கோபாலுக்கும், தமிழறிஞரும், கல்வியாளருமான டாக்டர். அவ்வை நடராஜனுக்கு ஆளுநர் வழங்குகிறார்.
இதைத் தொடர்ந்து, 21-ம் தேதி கே.சி.டி.யில் பட்டப்படிப்பை முடித்து வெளிச்செல்லும் மாணவர்களுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், கல்வி, விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் 1,025 மாணவர்களுக்கு ரூ. 1.02 கோடி செலவில் மகாத்மா காந்தியின் பெயரில் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர். நா. மகாலிங்கத்தின் 95-வது பிறந்த நாளையொட்டி, நாளை முதல் 23-ம் தேதி வரை நிறுவனர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில், 20-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார். அப்போது, கல்லூரியில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி மத்திய நூலகத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “ஞான சபை” எனும் தியான மையத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும், அருட்செல்வர் விருதினை ஜி.டி. டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.டி. கோபாலுக்கும், தமிழறிஞரும், கல்வியாளருமான டாக்டர். அவ்வை நடராஜனுக்கு ஆளுநர் வழங்குகிறார்.
இதைத் தொடர்ந்து, 21-ம் தேதி கே.சி.டி.யில் பட்டப்படிப்பை முடித்து வெளிச்செல்லும் மாணவர்களுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், கல்வி, விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் 1,025 மாணவர்களுக்கு ரூ. 1.02 கோடி செலவில் மகாத்மா காந்தியின் பெயரில் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.