வரும் 20-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை வருகை

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் 20-ம் தேதி கோவை வருகிறார்.

கோவை : குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் 20-ம் தேதி கோவை வருகிறார். 

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர். நா. மகாலிங்கத்தின் 95-வது பிறந்த நாளையொட்டி, நாளை முதல் 23-ம் தேதி வரை நிறுவனர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில், 20-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார். அப்போது, கல்லூரியில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி மத்திய நூலகத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “ஞான சபை” எனும் தியான மையத்தையும் திறந்து வைக்கிறார்.

மேலும், அருட்செல்வர் விருதினை ஜி.டி. டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.டி. கோபாலுக்கும், தமிழறிஞரும், கல்வியாளருமான டாக்டர். அவ்வை நடராஜனுக்கு ஆளுநர் வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து, 21-ம் தேதி கே.சி.டி.யில் பட்டப்படிப்பை முடித்து வெளிச்செல்லும் மாணவர்களுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், கல்வி, விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் 1,025 மாணவர்களுக்கு ரூ. 1.02 கோடி செலவில் மகாத்மா காந்தியின் பெயரில் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...