7 பேருக்கு மறுவாழ்வு அளித்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் உடல் உறுப்பு தானம் செய்ததால், 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் உடல் உறுப்பு தானம் செய்ததால், 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

 

கடந்த 13-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தினால் காயமடைந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதனால், லிங்கராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, இதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு இரு சிறுநீரகங்களும் தானமாக கொடுக்கப்பட்டது. சங்கரா கண் மருத்துவமனைக்கு இரண்டு கருவிழிகளும், பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டது. நுரையீரல் மற்றும் இதயம் தற்போது சென்னை க்லோபல் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு பொருத்தபட்டுள்ளது. 

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் பாரதன், மற்றும் அவரது குழு மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்தனர். இதன்மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை "அதிக மக்கள் எட்டு மணி நேரத்தில் உறுப்பு நன்கொடையாளர்கள் எனப் பதிவு செய்து" கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்த கே.என்.எஸ். லிங்கராஜுக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...