தொடர் மழையால் உழவர் சந்தை வியாபாரிகள் கடும் அவதி

நீலகிரியில் பெய்து வந்த தொடர் மழையால் உழவர் சந்தைப் பகுதிகளில் கூரைகள் புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி : நீலகிரியில் பெய்து வந்த தொடர் மழையால் உழவர் சந்தைப் பகுதிகளில் கூரைகள் புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 



நீலகிரி மாவட்டத்தில் வரும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இந்த நிலையில், மதியம் 12.30 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்தது. இதேபோல, கோத்தகிரி, கோடநாடு போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



இந்நிலையில், உதகை உழவர் சந்தையில் தற்போது விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மழை மற்றும் வெயில் நேரங்களில் பாதுகாப்புக்காக புதிதாக மேற்கூரைகள் உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடியாத நிலையில், இன்று பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாமல் கடைகளுக்குள்ளும், உழவர் சந்தை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், காய்கறிகள் சேதமடைந்தன. இதன் காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் உழவர் சந்தைப் பகுதியை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை முழுமையாக செய்து முடித்துத் தர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...