திருப்பதி மலைப்பாதையில் பேட்டரி பேருந்து சோதனை ஓட்டம் தொடக்கம்

திருப்பதியில் இருந்து திருமலை வரை பேட்டரியால் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

திருப்பதி : திருப்பதியில் இருந்து திருமலை வரை பேட்டரியால் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் திருப்பதி வரை வருகின்றன. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வருகின்றனர். சாதாரண பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

எனவே, திருமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கவும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு செய்தது. எனவே, ரூ. 2 கோடி செலவிலான இரு பேட்டரி பேருந்துகளை ஒருமாதம் வரை சோதனை ஓட்டம் அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பேட்டரி பேருந்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் திருப்பதியில் சில நாட்கள் இயக்கிப் பார்த்தனர். இந்த நிலையில் இன்று முதல் சில நாட்கள் திருப்பதி மலைப்பாதையில் பேட்டரி பேருந்தின் சோதனை ஓட்டம் நடை பெறும். முழு அளவிலான சோதனை ஓட்டத்திற்கு பின்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேட்டரி பேருந்துகள் திருமலை - திருப்பதி இடையே பயணிக்கும். சுமார் 4 மணிநேரம் சார்ஜ் செய்தால் பேட்டரி பேருந்து 250 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...