விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் அருகே விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் அருகே விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



பல்லடம் அருகே விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மின்கோபுரங்கள் அமைப்பதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எனவே இத்திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏர்முனை விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...