திருப்பூர் அருகே விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் : திருப்பூர் அருகே விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் அருகே விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மின்கோபுரங்கள் அமைப்பதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எனவே இத்திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏர்முனை விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பல்லடம் அருகே விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மின்கோபுரங்கள் அமைப்பதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எனவே இத்திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏர்முனை விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.