தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கூறும் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்று காவிரி படுகை வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என நடிகரும், தி.மு.க.வைச் சேர்ந்தவருமான ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் : தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கூறும் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்று காவிரி படுகை வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என நடிகரும், தி.மு.க.வைச் சேர்ந்தவருமான ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாநகர மாவட்ட தி.மு.க. சார்பில், கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி தினப் பொதுக்கூட்டம் ராயபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், தி.மு.க.வை சேர்ந்த நடிகர் ராதாரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :- நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சித்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அம்மாநிலத்தவர்கள் ஆளும் போது தமிழகத்தையும், தமிழர்கள்தான் ஆளவேண்டும்.

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்லும் ரஜினிகாந்த், காவிரி படுகையில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப, அவர் சொத்து சேர்த்து வைத்திருக்கும் கர்நாடகம் சென்று கிருஷ்ணசாகர் அணையை திறந்து தண்ணீர் கொண்டு வர முடியுமா..?. அம்மா இருக்கும்போது சிறிய பிரச்சினைக்காகவே பயந்துபோய் வெளிநாடு செல்வதாக கூறிய கமல்ஹாசனை நம்பி எப்படி வாக்களிக்க முடியும். மேலும், பெரியார் சிலையை உடைப்பதாகக் கூறிய எச்.ராஜா இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி பேசினால் பா.ஜ.க.வில் வேண்டுமானால் உயர்பதவி கிடைக்குமே தவிர, தமிழகத்தில் சிவலோக பதவிதான் கிடைக்கும். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அவர்களே அழிந்துபோவார்கள். தி.மு.க.தான் அடுத்த ஆட்சி அமைக்கும். அதற்கு தொண்டர்கள் உறுதுணையாக உழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர மாவட்ட தி.மு.க. சார்பில், கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி தினப் பொதுக்கூட்டம் ராயபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், தி.மு.க.வை சேர்ந்த நடிகர் ராதாரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :- நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சித்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அம்மாநிலத்தவர்கள் ஆளும் போது தமிழகத்தையும், தமிழர்கள்தான் ஆளவேண்டும்.

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்லும் ரஜினிகாந்த், காவிரி படுகையில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப, அவர் சொத்து சேர்த்து வைத்திருக்கும் கர்நாடகம் சென்று கிருஷ்ணசாகர் அணையை திறந்து தண்ணீர் கொண்டு வர முடியுமா..?. அம்மா இருக்கும்போது சிறிய பிரச்சினைக்காகவே பயந்துபோய் வெளிநாடு செல்வதாக கூறிய கமல்ஹாசனை நம்பி எப்படி வாக்களிக்க முடியும். மேலும், பெரியார் சிலையை உடைப்பதாகக் கூறிய எச்.ராஜா இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி பேசினால் பா.ஜ.க.வில் வேண்டுமானால் உயர்பதவி கிடைக்குமே தவிர, தமிழகத்தில் சிவலோக பதவிதான் கிடைக்கும். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அவர்களே அழிந்துபோவார்கள். தி.மு.க.தான் அடுத்த ஆட்சி அமைக்கும். அதற்கு தொண்டர்கள் உறுதுணையாக உழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.