நெல்லை அருகே பள்ளி விழாவில் அதிகம் வெளிச்சம் கொண்ட விளக்கு பயன்படுத்தப்பட்டதால், மாணவ, மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை : நெல்லை அருகே பள்ளி விழாவில் அதிகம் வெளிச்சம் கொண்ட விளக்கு பயன்படுத்தப்பட்டதால், மாணவ, மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர்வாடியில் ஒரு தனியார் பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்த மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் அதிக வெளிச்சத்திற்காக சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், ஏதோ கோளாறு ஏற்பட்டதால், அங்கு இருந்த 60 மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்ணில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் இன்று மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் பொறுப்பாளருக்கும், இதே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிக வெளிச்சத்தால் மாணவ, மாணவிகள் கண் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவ துறையின் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்," என்றார்.
ஏர்வாடியில் ஒரு தனியார் பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்த மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் அதிக வெளிச்சத்திற்காக சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், ஏதோ கோளாறு ஏற்பட்டதால், அங்கு இருந்த 60 மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்ணில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் இன்று மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் பொறுப்பாளருக்கும், இதே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிக வெளிச்சத்தால் மாணவ, மாணவிகள் கண் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவ துறையின் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்," என்றார்.