தபால்துறையின் அலட்சியத்தால் இளம்பெண்ணின் அரசுப் பணிக்கான கனவு சிதைப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தபால் துறையினரின் அலட்சியத்தால் அரசுப்பணி வாய்ப்பை இழந்து தவிப்பதாக கண்ணீர் மல்க இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தபால் துறையினரின் அலட்சியத்தால் அரசுப்பணி வாய்ப்பை இழந்து தவிப்பதாக கண்ணீர் மல்க இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சாந்தி நகரில் வசித்து வருபவர் வித்யா (22). இருசக்கர வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வரும் சோமசுந்திரம் என்பவரது மகளான இவர், தனது ஏழ்மையான நிலையிலும் சிரமப்பட்டு பி.எஸ்.சி பட்டபடிப்பை முடித்துள்ளார். அரசுப்பணியில் சேரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த வித்யா தமிழக நில அளவைப் பதிவேடுகள் துறையில் காலியாக இருந்த பதிவறை எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்துள்ளார். பணிக்கான அனைத்து தகுதிகளும் இருந்த காரணத்தினால் அவரை இப்பணிக்கான நேர்முக தேர்விற்கு வருமாறு துறை சார்பில் கடந்த 12-ம் தேதி ஊட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவகத்தில் இருந்து அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 



அதில், நேற்று (16-ம் தேதி) காலை 10.30 மணிக்கு ஊட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்விற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 14-ம் தேதி வந்தடைந்துள்ளது. வித்யா வசிக்கும் சாந்தி நகர் விலாசம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேர்பின்புறம் மிக அருகிலேயே உள்ளது. இருப்பினும், கடிதம் 14-ம் தேதியோ அல்லது 15-ம் தேதியோ கூட வழங்கப்படாமல், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 16-ம் தேதி (நேற்று) மதியம் 1.40 மணிக்கு வித்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது. 

காலை 10.30 மணிக்கு பங்கேற்க வேண்டிய நேர்முக தேர்வுக்கான கடிதம் மதியம் இரண்டு மணியளிவில் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த வித்யா, கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்ற தனது அரசுப்பணி கனவு ஒரு சிலரின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு விட்டதாகக் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். தாமதம் பற்றி புகார் தெரிவிக்க தலைமை தபால் அலுவலகம் சென்ற வித்யாவிடம் இது குறித்து புகார் கடிதம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அங்குள்ள அதிகாரிகள் அலட்சியத்துடன் பதில் அளித்ததாக வித்யா குற்றம்சாட்டினார். மேலும், இனி யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்றார் அவர். இது குறித்து மேட்டுப்பாளையம் தலைமை தபால்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது வித்யாவிடம் அளித்த அதே பதிலை நம்மிடமும் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...