பவானி ஆற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு : போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து ஏற்கனவே திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கோவை இணைக்கப்பட்டுள்ள காரணத்தினால், கோவை மாநகரில் தடையற்ற குடிநீர் வழங்கும் வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் பெரும் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. 



ஏற்கனவே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் கோவைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கோவை மாநகருக்கு இங்குள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால் ஆற்றுநீர் வற்றி மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, முறையான அனுமதியின்றி போராட்டத்தை நடத்த வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...