ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து ஏற்கனவே திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கோவை இணைக்கப்பட்டுள்ள காரணத்தினால், கோவை மாநகரில் தடையற்ற குடிநீர் வழங்கும் வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் பெரும் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.

ஏற்கனவே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் கோவைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கோவை மாநகருக்கு இங்குள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால் ஆற்றுநீர் வற்றி மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, முறையான அனுமதியின்றி போராட்டத்தை நடத்த வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து ஏற்கனவே திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கோவை இணைக்கப்பட்டுள்ள காரணத்தினால், கோவை மாநகரில் தடையற்ற குடிநீர் வழங்கும் வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் பெரும் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.

ஏற்கனவே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் கோவைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கோவை மாநகருக்கு இங்குள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால் ஆற்றுநீர் வற்றி மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, முறையான அனுமதியின்றி போராட்டத்தை நடத்த வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.