கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடுத்த புதுக்காடு பகுதிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அங்கலகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது பழநியில் இருந்து வால்பாறைக்கு சென்ற அரசு பேருந்துடன் போட்டி போட்டு சென்று உள்ளது.
ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த புதுக்காடு செல்லும் பேருந்து வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் அட்டக்கட்டியை சேர்ந்த மோனிகா (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், வால்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவன் கார்த்தி (19), சிங்காரவேல் (40), வெங்கடேசன் (18), புருஷோத்தமன் (19) மற்றும் முனியாண்டி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆழியார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடுத்த புதுக்காடு பகுதிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அங்கலகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது பழநியில் இருந்து வால்பாறைக்கு சென்ற அரசு பேருந்துடன் போட்டி போட்டு சென்று உள்ளது.
ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த புதுக்காடு செல்லும் பேருந்து வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் அட்டக்கட்டியை சேர்ந்த மோனிகா (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், வால்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவன் கார்த்தி (19), சிங்காரவேல் (40), வெங்கடேசன் (18), புருஷோத்தமன் (19) மற்றும் முனியாண்டி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆழியார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.