செயற்கை நூலிழை உற்பத்தியில் கவனம் செலுத்த மத்திய ஜவுளித்துறை ஆணையர் அறிவுறுத்தல்

சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

கோவை : சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின் மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- உள்நாட்டு உற்பத்தி 110 பில்லியன் டாலர், சர்வதேச உற்பத்தி 40 பில்லியன் டாலர் என ஏற்றுமதியில் 150 பில்லியன் டாலர் அளவிற்கு ஜவுளித்துறை வரத்தகத்தில் இந்தியா பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில், 2025-க்குள் 300 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் 70% செயற்கை நூல், 30% பருத்தி தேவை என்ற நிலையில், இந்தியாவில் 30% பருத்தி, 70% செயற்கை நூல் என்று முற்றிலுமாக மாறுபட்டவையாக உள்ளதால், சர்வதேச சந்தையில் இந்தியா போட்டியிடுவதற்கு சிக்கலாக உள்ளது. எனவே, தற்போது இந்தியாவில் பருத்தி 6.5 பில்லியன் கிலோ என்ற அளவிலும், செயற்கை நூல் 2.5 பில்லியன் கிலோவாக இருக்கும் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய பருத்தி அரசனாக பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஜவுளித்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

புல்லட் ப்ரூப் போன்ற தொழில்நுட்ப ரீதியான ஆடைகளுக்கு எதிர்கால தேவை அதிகமாக இருப்பதால் அது சார்ந்த உடைகளை தயாரிப்பதில் ஜவுளித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். வங்கதேசம் நாட்டிலிருந்து தரமற்ற ஆடைகள் இந்தியாவில் நுழைவதை தடுக்க ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் தமிழகத்தில் செயற்கை சார்ந்த ஆடைகளை அதிகரிக்க உதவும். இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...