சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.
கோவை : சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின் மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- உள்நாட்டு உற்பத்தி 110 பில்லியன் டாலர், சர்வதேச உற்பத்தி 40 பில்லியன் டாலர் என ஏற்றுமதியில் 150 பில்லியன் டாலர் அளவிற்கு ஜவுளித்துறை வரத்தகத்தில் இந்தியா பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில், 2025-க்குள் 300 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 70% செயற்கை நூல், 30% பருத்தி தேவை என்ற நிலையில், இந்தியாவில் 30% பருத்தி, 70% செயற்கை நூல் என்று முற்றிலுமாக மாறுபட்டவையாக உள்ளதால், சர்வதேச சந்தையில் இந்தியா போட்டியிடுவதற்கு சிக்கலாக உள்ளது. எனவே, தற்போது இந்தியாவில் பருத்தி 6.5 பில்லியன் கிலோ என்ற அளவிலும், செயற்கை நூல் 2.5 பில்லியன் கிலோவாக இருக்கும் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய பருத்தி அரசனாக பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஜவுளித்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
புல்லட் ப்ரூப் போன்ற தொழில்நுட்ப ரீதியான ஆடைகளுக்கு எதிர்கால தேவை அதிகமாக இருப்பதால் அது சார்ந்த உடைகளை தயாரிப்பதில் ஜவுளித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். வங்கதேசம் நாட்டிலிருந்து தரமற்ற ஆடைகள் இந்தியாவில் நுழைவதை தடுக்க ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் தமிழகத்தில் செயற்கை சார்ந்த ஆடைகளை அதிகரிக்க உதவும். இவ்வாறு கூறினார்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின் மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- உள்நாட்டு உற்பத்தி 110 பில்லியன் டாலர், சர்வதேச உற்பத்தி 40 பில்லியன் டாலர் என ஏற்றுமதியில் 150 பில்லியன் டாலர் அளவிற்கு ஜவுளித்துறை வரத்தகத்தில் இந்தியா பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில், 2025-க்குள் 300 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 70% செயற்கை நூல், 30% பருத்தி தேவை என்ற நிலையில், இந்தியாவில் 30% பருத்தி, 70% செயற்கை நூல் என்று முற்றிலுமாக மாறுபட்டவையாக உள்ளதால், சர்வதேச சந்தையில் இந்தியா போட்டியிடுவதற்கு சிக்கலாக உள்ளது. எனவே, தற்போது இந்தியாவில் பருத்தி 6.5 பில்லியன் கிலோ என்ற அளவிலும், செயற்கை நூல் 2.5 பில்லியன் கிலோவாக இருக்கும் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய பருத்தி அரசனாக பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஜவுளித்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
புல்லட் ப்ரூப் போன்ற தொழில்நுட்ப ரீதியான ஆடைகளுக்கு எதிர்கால தேவை அதிகமாக இருப்பதால் அது சார்ந்த உடைகளை தயாரிப்பதில் ஜவுளித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். வங்கதேசம் நாட்டிலிருந்து தரமற்ற ஆடைகள் இந்தியாவில் நுழைவதை தடுக்க ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் தமிழகத்தில் செயற்கை சார்ந்த ஆடைகளை அதிகரிக்க உதவும். இவ்வாறு கூறினார்.