கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில், உந்துசக்தி குறைவு காரணமாக 4 மணிநேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில், உந்துசக்தி குறைவு காரணமாக 4 மணிநேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயிலில் அடிக்கடி உந்துசக்தி குறைவு ஏற்படுவதால் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து வரும் நிலை ஏற்படுகிறது. கடந்து சில நாட்களாக இப்பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலைப்பாதையில் பல இடங்களில் நின்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயில், உந்துசக்தி முழுவதும் குறைந்ததால் ஹில்குரோவ் அருகே நடுக்காட்டில் நின்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். ரயில்வே ஊழியர்கள் பழுதை சீரமைத்தபின் 4 மணிநேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்து சேர்ந்தது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயிலில் அடிக்கடி உந்துசக்தி குறைவு ஏற்படுவதால் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து வரும் நிலை ஏற்படுகிறது. கடந்து சில நாட்களாக இப்பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலைப்பாதையில் பல இடங்களில் நின்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயில், உந்துசக்தி முழுவதும் குறைந்ததால் ஹில்குரோவ் அருகே நடுக்காட்டில் நின்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். ரயில்வே ஊழியர்கள் பழுதை சீரமைத்தபின் 4 மணிநேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்து சேர்ந்தது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.