கூட்டணி முறிவு : பா.ஜ.க.வுக்கு டாட்டா காட்டிய ஆந்திரா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திரா, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறப்பு நிதி வழங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஆந்திரா முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின்னர் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அதிரடியாக தெரிவித்தார். மேலும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...