காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சையளிக்க முயன்ற வனத்துறையினர்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர்.

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர். 



மாங்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் காட்டு யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், வலி தாங்க முடியாமல், வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை, குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் சுற்றித் திரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட வன அதிகாரி என். சதீஷ் தலைமையிலான குழுவினர், யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 



மேலும், வன கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகரின் உதவியுடன் மருந்து பொருட்கள் கலந்த உணவுகளை யானைக்கு கொடுக்க முயன்றனர். அருகில் இருந்த தண்ணீர் தொட்டியிலும் மருந்து கலக்கப்பட்டது. படுகாயத்துடன் பிளிறியபடி இருந்த யானையால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் சற்று பீதியடைந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...