கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர்.
கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர்.

மாங்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் காட்டு யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், வலி தாங்க முடியாமல், வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை, குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் சுற்றித் திரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட வன அதிகாரி என். சதீஷ் தலைமையிலான குழுவினர், யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

மேலும், வன கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகரின் உதவியுடன் மருந்து பொருட்கள் கலந்த உணவுகளை யானைக்கு கொடுக்க முயன்றனர். அருகில் இருந்த தண்ணீர் தொட்டியிலும் மருந்து கலக்கப்பட்டது. படுகாயத்துடன் பிளிறியபடி இருந்த யானையால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் சற்று பீதியடைந்தனர்.

மாங்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் காட்டு யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், வலி தாங்க முடியாமல், வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை, குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் சுற்றித் திரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட வன அதிகாரி என். சதீஷ் தலைமையிலான குழுவினர், யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

மேலும், வன கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகரின் உதவியுடன் மருந்து பொருட்கள் கலந்த உணவுகளை யானைக்கு கொடுக்க முயன்றனர். அருகில் இருந்த தண்ணீர் தொட்டியிலும் மருந்து கலக்கப்பட்டது. படுகாயத்துடன் பிளிறியபடி இருந்த யானையால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் சற்று பீதியடைந்தனர்.