பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பண்ணை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பண்ணை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட பண்ணை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், வாரத்தில் 5 நாள் வேலை, பி.எப்.வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பண்ணை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுவரை அரசின் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், வேளாண் பல்கலை கழக வளாகத்தில் பண்ணை தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று பணிகளை புறக்கணித்து, வளாகத்திலேயே ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் பண்ணை தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட பண்ணை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், வாரத்தில் 5 நாள் வேலை, பி.எப்.வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பண்ணை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுவரை அரசின் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், வேளாண் பல்கலை கழக வளாகத்தில் பண்ணை தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று பணிகளை புறக்கணித்து, வளாகத்திலேயே ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் பண்ணை தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
