இம்மாத இறுதிவரை உள்ள சனி, ஞாயிறு கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாநகாட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு (2017-18-ம்) நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களின் நலன் கருதி, மார்ச் 31 வரையுள்ள அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும். 

எனவே, இந்த வசதியினை முழுமையாகப் பயன்படுத்தி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...