உதகையில் இயற்கையோடு இணைந்த பள்ளியின் தொடக்க விழா

நீலகிரி மாவட்டம் உதகையில் இயற்கை மற்றும் இயற்கை உணவுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையோடு இணைந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இயற்கை மற்றும் இயற்கை உணவுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையோடு இணைந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

இயற்கையைப் பாதுகாக்கவும், இயற்கையான உணவு பழக்க வழக்கத்தைக் கொண்டு வருவதற்காக நாடெங்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியரிடையே சிறு வயது முதலே இயற்கையைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மூலிகை அறிவு, பிளாஸ்டிக் இல்லா பகுதி, இயற்கை உரம் தயாரிப்பு, அதிக எண்ணிக்கையில் சோலை மரங்கள் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு, மின் சிக்கனம், பறவைகள் பாதுகாப்பு என பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து, இயற்கையோடு இணைந்த பள்ளிக்கூடத்தை உருவாக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.



மேலும், சுற்றுச்சூழல் துறை சார்பாக மாவட்டங்கள் தோறும் 10 பள்ளிகளைத் தேர்வு செய்து மரம் வளர்க்கவும், இயற்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் அமைந்திருக்கும் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியை இயற்கையோடு இணைந்த பள்ளிக்கூடமாக தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி நடவு செய்து, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து கம்பு, ராகி, சோளம், தினை போன்ற இயற்கை உணவுகளைப் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை பாதுகாப்பு குறித்த உரை நிகழ்த்தினர். மேலும், அழிவின் பட்டியலில் உள்ள சிட்டுக்குருவிகள் இந்தப் பள்ளி வளாகத்தில் கூடுகள் அமைத்து பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...