எடை குறைத்து வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்: முறையிடாத மலைவாழ் மக்கள்

கோவை மாவட்டம் ஆனைகட்டியில் நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து கேட்க முடியாத சூழலுக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டியில் நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து கேட்க முடியாத சூழலுக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனைகட்டி பகுதியில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்களுக்கு நடமாடும் நியாய விலைக்கடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், அது செயல்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தூமனூர், சேம்புக்கரை, ஆரநாட்டுக்காடு, தூவைப்பதி, கொண்டனூர் புதூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள், அரசு கொடுக்கும் இலவச அரிசியை பணம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். சேம்புக்கரைக்கு ஒரு கிலோ அரிசிக்கு இரண்டு ரூபாய் வாகன செலவிற்கு கொடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 



ஆலமரமேடு பகுதியிலுள்ள நியாய விலைக்கடை வாரத்திற்கு இருநாட்கள் செயல்பட வேண்டும். ஆனால், பொருட்கள் இல்லாமல் மூடியே கிடப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இங்குள்ள நியாய விலைக்கடையில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆலமரமேடு மற்றும் ஆனைகட்டி பொதுவிநியோகக் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியை வேறொரு எடைபோடும் இயந்திரத்தில் எடை போட்டால் ஒருகிலோ முதல் இரண்டு கிலோ வரை குறைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் எங்களுக்கு தெரிந்தும், நாங்கள் எப்படி கேட்க முடியும் என அப்பாவிகளாக நம்மிடமே கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், சர்க்கரைக்கு ஒரு கிலோவிற்கு 100 கிராம் வரை குறைத்து வழங்கப்படுகிறது. அரசு கொடுக்கக்கூடிய இலவச அரிசியைக் கூட அளவை குறைத்து கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. டன் கணக்கான ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அரசு வட்டாட்சியர் தலைமையில் பறக்கும்படை அமைத்தால் மட்டும் போதாது என்றும், கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் பொருத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக நியாய விலைக்கடையில் பணிபுரிபவர்கள் பதிவு செய்வதால், தொலைபேசிகளில் வரும் குறுந்தகவல்கள் குறித்து நிறையப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இத்தனை முறைகேடுகளையும் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...