தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.
தேனி: தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.
குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மரணமடைந்தனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், தீ விபத்தில் 90 சதவீத காயமடைந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி சக்திகலா (40) மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மரணமடைந்தனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், தீ விபத்தில் 90 சதவீத காயமடைந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி சக்திகலா (40) மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.