அறநிலையத்துறையைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கருவம்பாளையம், பாரப்பாளையம் ஆகிய இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதிகள் கோவில் இடம் எனக் கூறி, அங்குள்ளவர்களை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி அறநிலையத்துறை சார்பில் கடந்த மாதம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுக் குடியிருப்புகளை கட்டியுள்ள தங்களை, கோவில் இடம் எனக்கூறி காலி செய்ய சொல்வதாகவும், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அறநிலையத்துறையின் முடிவை வாபஸ் பெற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்திருந்தனர். 

இந்த நிலையில், அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கருவம்பாளையம் பகுதியில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்காவிட்டால் இனி தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...