தொடங்கியது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது


கோவை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 

ஏப்ரல் 20-ம் தேதிவரை நடைபெறும் இந்த தேர்வினை தமிழகத்தில் மட்டும் சுமார் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 36 ஆயிரத்து 649 பேர் தனித் தேர்வர்கள். இதற்காக, 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 305 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 820 மாணவர்கள், 8 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 514 பேர் எழுதுகின்றனர். புதுச்சேரியில் 38 மையங்கள், காரைக்காலில் 13 மையங்கள் என மொத்தம் 52 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. மேலும், தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களைக் கண்காணிக்க புதுச்சேரியில் 5 பறக்கும் படைகளும், காரைக்காலில் 2 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களாக மட்டும் 991 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...