கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள திருமாலையம்பாளையத்தில் சித்ரா என்ற பெண்ணின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள திருமாலையம்பாளையத்தில் சித்ரா என்ற பெண்ணின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மதுக்கரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், திருமாலையாயம்பாளையம் ரொட்டி கவுண்டன் புதூர் கிராமைத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமியின் மனைவி சித்ரா(38) நேற்று இரவு சுமார் 7:30 மணி அளவில் தோட்டம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தில் இடி விழுந்தது. இந்த விபத்தில் சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த க.க.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இடி விழுந்ததில் பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மதுக்கரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், திருமாலையாயம்பாளையம் ரொட்டி கவுண்டன் புதூர் கிராமைத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமியின் மனைவி சித்ரா(38) நேற்று இரவு சுமார் 7:30 மணி அளவில் தோட்டம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தில் இடி விழுந்தது. இந்த விபத்தில் சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த க.க.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இடி விழுந்ததில் பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.