மெட்ராஸ் சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையிலான 'புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ்' ஒரு பார்வை

சுமார் 89 ஆண்டுகளுக்கு முன்னதாக, மெட்ராஸில் (சென்னை) இருந்து மேட்டுப்பாளையத்திற்கு முதல்முறையாக ரயில்சேவையை தெற்கு ரயில்வே வழங்கியது. 1929, மார்ச் 15-ம் தேதி புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் எனப்படும் ரயில் இயக்கப்பட்டது. மெட்ராஸ் சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் இயக்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ரயிலில் முதல்முறையாக முதல்வகுப்பு பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, 1908 முதல் 1929-ம் ஆண்டு வரைக்கும் மெட்ராஸ் சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே 'மேட்டுப்பாளையம் மெயில்' என்ற ரயில்சேவை வழங்கப்பட்டு வந்தது.

கோவை : சுமார் 89 ஆண்டுகளுக்கு முன்னதாக, மெட்ராஸில் (சென்னை) இருந்து மேட்டுப்பாளையத்திற்கு முதல்முறையாக ரயில்சேவையை தெற்கு ரயில்வே வழங்கியது. 1929, மார்ச் 15-ம் தேதி புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் எனப்படும் ரயில் இயக்கப்பட்டது. மெட்ராஸ் சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் இயக்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ரயிலில் முதல்முறையாக முதல்வகுப்பு பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, 1908 முதல் 1929-ம் ஆண்டு வரைக்கும் மெட்ராஸ் சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே 'மேட்டுப்பாளையம் மெயில்' என்ற ரயில்சேவை வழங்கப்பட்டு வந்தது. 

இதைத் தொடர்ந்து, நாள்தோறும் அடிப்படையில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான 3-ம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டு புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை இயக்கப்பட்டது. இதேபோல, மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மீட்டர் பாதை ரயில்சேவை புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது. ஆனால், 1970-ம் ஆண்டிற்கு பிறகு மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸின் மீட்டர் பாதை ரயில்சேவை நிறுத்தப்பட்டு, பயணிகள் சேவை வழங்கப்பட்டது. 

மெட்ராஸில் இருந்து அகல இருப்புப் பாதை வழியாக மேட்டுப்பாளையம் வரும் ரயில்களில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் ஈரோட்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுத்தங்களில் இறங்குபவர்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது. அதேவேளையில், 3-ம் வகுப்பு பயணிகளுக்கு மேட்டுப்பாளையம் வரையிலும் முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மீட்டர் பாதையில் இயக்கப்படும் ரயிலில் 3-ம் வகுப்பு பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சிறிதளவு மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 

அதிவேக சொகுசு ரயில் : சென்னையில் இருந்து இரவு 09.15 மணிக்கு புறப்படும். மேட்டுப்பாளையத்திற்கு மறுநாள் காலை 08.35 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.20 மணிக்கு உதகை புறப்படுகிறது. நண்பகல் 12.36 மணியளவில் உதகை சென்றடைகிறது. 

அதிவேக சொகுசு ரயில் (சென்னை மார்க்கமாக) : உதகையில் இருந்து பிற்பகல் 02.20 மணிக்கு புறப்படும். மேட்டுப்பாளையத்திற்கு மாலை 05.15 மணிக்கு வந்தடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 06.10 மணிக்கு சென்னைக்கு புறப்படும். மறுநாள் காலை 06.35 மணியளவில் சென்னை சென்றடையும். 

நீலகிரியின் முக்கிய ரயில்சேவையாக இருக்கும் இந்த ரயிலானது, 9 குளிர்சாதனப் பெட்டிகளோடு இயக்கப்படும் ஒரே ரயிலாகும். இந்த ரயில் சென்னையில் உள்ள கோச்சிங் யார்டில் பராமரிக்கப்படுகிறது. மிகவும் பழமையான இந்த ரயில் எலக்ட்டிரிக் என்ஜின்கள், ஈரோட்டில் உள்ள எலக்ட்ரிக் என்ஜின் தயாரிப்பு பணிமனையில் இருந்து எடுத்து வரப்படுகிறது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...