கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இனி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் என்றும், வரும் 26-ம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இனி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் என்றும், வரும் 26-ம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தியது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இதே வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறிய அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இடைக்கால நிவாரணம் பெற நீதிபதிகள் அறிவுத்தியதை அடுத்து, அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

டெல்லி கோர்ட்டு மனுவை விசாரித்து வருகிற 20-ந்தேதிவரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இன்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் கபில்சிபல் ஆஜராக முடியாததால் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை 22-ம் தேதிவரை மேலும் 2 நாட்களுக்கு நீடித்து நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ். மேத்தா உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, டெல்லி உயர் நீதிமன்றத்தின் கைது தடை உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என தெரிவித்தனர். 

மேலும், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய 26-ம் தேதி வரை தடை விதித்தனர். 

அதே தேதியன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...