பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் தெலுங்கு தேசக் கட்சி அண்மையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதனையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயற்சிக்கிறார். ஆந்திர மாநிலத்திற்கு என்ன சலுகைகள் வழங்க முடியுமோ, அதனை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணையும் வைத்து தங்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது. சமீபத்தில், உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இடைத்தேர்தலில் பா.ஜ.க., தோல்வி அடைந்தது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் பேசினார்.
ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் தெலுங்கு தேசக் கட்சி அண்மையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதனையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயற்சிக்கிறார். ஆந்திர மாநிலத்திற்கு என்ன சலுகைகள் வழங்க முடியுமோ, அதனை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணையும் வைத்து தங்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது. சமீபத்தில், உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இடைத்தேர்தலில் பா.ஜ.க., தோல்வி அடைந்தது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் பேசினார்.