காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான சட்டப்போராட்டத்தை நடத்தியுள்ளது. கடந்த காலங்களை போலவே, மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தந்தவர் ஜெயலலிதா. என்றார். 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளைப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பட்டியலிட்டார். மேலும், சென்னை வந்த பிரதமரிடம், அனைத்துக் கட்சி தீர்மானத்தை விளக்கி கோரிக்கை வைத்தோம் என கூறினார்.

காவிரி விவகாரத்தில் தி.மு.க., செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் சபாநாயகர் வேண்டுகோள் வைத்தார். 

பின்னர், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :- ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது. விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்துக்கு தி.மு.க., முழு ஆதரவு உண்டு. காவிரி விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது என தி.மு.க. எண்ணுகிறது. அனைத்து கட்சி தலைவர்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்தின் நெருக்கடியான தருணமாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் கடத்தாமல் அமைக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு உள்ளாகும். 

தமிழகத்திற்கு முழுமையான நீரை கர்நாடக எந்த ஆண்டும் வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அனைத்து தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யத் தயார். காவிரி விவகாரம் டெல்டா விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் பிரச்சனையாக உள்ளது. எனக் கூறினார். 

பின்னர், முதலமைச்சர் தாக்கல் செய்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...