கோவையில் கடந்த இரு தினங்களாக கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை: கோவையில் கடந்த இரு தினங்களாக கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் முன்னதாக தொடங்கிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. 'மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த வெயில் என்றால், மே மாதத்தில் எப்படி இருக்கும்?' என்ற பரவலான பேச்சு கோவை மக்களிடையே கேட்க முடிந்தது. இந்த நிலையில், கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கடந்த 12-ம் தேதி வேளாண் பல்கலை., அறிவித்தது.

அதன்படி, நேற்று முன்தினம் கோவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று மதியம் முதல் கோவையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை கோவை மக்களின் மனதைக் குளிர வைத்துள்ளது.