சுற்றுலா பயணிகளை கவரும் மலை ரயில் மாதிரியான பொருட்கள்

பாரம்பரிய நீலகிரி மலை ரயிலைப் பாதுகாக்கும் வகையில் ரயில்வேத்துறை சார்பில் மலை ரயில் மாதிரியான பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நீலகிரி: பாரம்பரிய நீலகிரி மலை ரயிலைப் பாதுகாக்கும் வகையில் ரயில்வேத்துறை சார்பில் மலை ரயில் மாதிரியான பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஹோம்மேடு சாக்லெட், தேயிலை தூள் போன்றவை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இன்னொரு சிறப்பு அம்சமான பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் அழகிய மலைகள், இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சி போன்றவை கண்டு ரசித்தப்படியே பயணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இந்நிலையில், இந்தப் பாரம்பரிய மலை ரயிலைப் பாதுகாக்கும் வகையில், இந்திய ரயில்வேத்துறை சார்பில் உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் மலை ரயிலின் மாதிரிகளைக் காட்சிப்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி மக், கீ செயின், டை, பேனா ஸ்டேண்டுகள், குழந்தைகள் விளையாடும் ரயில் சார்ந்த பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்து வருகின்றனர். இந்தப் பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய ரயில்வே அருங்காட்சியகத்தில் இருந்து வரவழைக்கப்படு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 ரூபாய் முதல் ரூ. 2,500 வரை இந்தப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...