வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

இடுவம்பாளையம் பகுதியில் உள்ள காமாட்சி நகர் பகுதியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல நேற்று பனியன் நிறுவனத்திற்கு சென்றுவிட்ட நிலையில், நதியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், பூபாலனின் சகோதரர் ஜீவா நேற்றிரவு வீட்டிற்கு வந்து பார்த்த, நதியா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, திருப்பூர் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் நேற்று மாலை 6 மணி வரை அக்கம்பக்கத்தினரோடு நதியா பேசிக் கொண்டிருந்ததாகவும், அதற்குப் பின்னரே அவர் வீட்டிற்குள் சென்றதாகவும் அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கொலை செய்த மர்ம நபர்கள், சடலமாக கிடந்த நதியாவின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்துள்ளது. எனவே, இந்தக் கொலை நகைக்காக செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...