தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை: மானியம், உதவித்தொகைக்கு ரூ. 75,723 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் மானியம் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் வழங்குவதற்காக இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 75,723 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மானியம் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் வழங்குவதற்காக இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 75,723 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டசபையில் இன்று 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடியாகவும், செலவு ரூ. 2.04 லட்சம் கோடியாகவும் உள்ளது. பற்றாக்குறை ரூ. 23,176 கோடியாக உள்ளது. ஆயத்தீர்வைகளின் மூலம் அரசுக்கு ரூ. 6,998 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ. 786 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை மாவட்டத்துக்கான வெள்ள தடுப்பு மேலாண்மை ரூ. 3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்படும். காவல்துறைக்கு ரூ. 7,877 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு ரூ. 75,723 கோடியாக இருக்கும். ஓய்வூதியம், இதர ஓய்வுகால பலன்களுக்கு ரூ. 25,362 கோடி, சம்பள செலவினங்களுக்கு ரூ. 52,171 கோடி, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ. 347.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

வருவாய் துறைக்கு 6.144 கோடி 

குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி

நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி

பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி

பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி

உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி

ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி

வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு

மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி

ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ. 347.59 கோடி 

பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ. 786 கோடி

காவல்துறைக்கு ரூ. 7,877 கோடி ஒதுக்கீடு

மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ. 250 கோடி

மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ. 60.58 கோடி

சுகாதார துறைக்கு ரூ. 11,638.44 கோடி 

உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ. 172 கோடி

வேளாண்மை துறைக்கு ரூ. 8916 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ. 972.86 கோடி

தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ. 1,074 கோடி

இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 191.18 கோடி

உள்ளாட்சிதுறைக்கு ரூ. 17,869 கோடி

குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 1,853 கோடி

முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ. 1,789 கோடி

பழங்குடியினர் நலனுக்கு ரூ. 333.82 கோடி

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ. 1,336 கோடி

இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ. 71.01 கோடி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க ரூ. 758 கோடி

கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி

சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,747 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...