மஞ்சூர் பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

குந்தா தாலூக்காவின் மிக முக்கிய வியாபார ஸ்தலமாக இருப்பது மஞ்சூர். இப்பகுதியைச் சுற்றி 30,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள மதுபான கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகள் அகற்றப்பட்டன. 

குறிப்பாக மஞ்சூர் பகுதியில் இருந்த இரண்டு மதுபான கடைகளும் அகற்றப்பட்டன. இதனால், இப்பகுதியில் இருப்பவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று மது பானங்களை வாங்கி வரும் நிலை ஏற்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரிக்கு, அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது பானங்கள் கிடைக்காததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா விடுதிகள் நடத்தி வருபவர்கள் மற்றும் உணவு விடுதி நடத்தி வருபவர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...