காத்திருப்போர் பட்டியலில் ரயில் பயணச்சீட்டை உறுதி செய்ய புதிய செயலி அறிமுகம்

ரயில் பயணங்களின் போது காத்திருக்கும் பயணியர் பட்டியலில் (RAC) பயணச்சீட்டை உறுதி செய்ய டிஜிட்டல் முறையிலான செயலி (ஆப்) காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை : ரயில் பயணங்களின் போது காத்திருக்கும் பயணியர் பட்டியலில் (RAC)  பயணச்சீட்டை உறுதி செய்ய டிஜிட்டல் முறையிலான செயலி (ஆப்) காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் பெரியய்யா முன்னிலையில் இந்த செயலி அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. 



"கோவை நுகர்வோர் இயக்கம்" என்ற அமைப்பு இந்த செயலியை உருவாக்கியுள்ளது. செயலியை உருவாக்கிய ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் இந்த செயலி இருந்தால், சார்ட்-க்கு பதிலாக இந்த செயலியை வைத்து ரயில் பெட்டியில் பயணம் செய்பவர்கள் எத்தனைப் பேர், அவர்களுடைய விபரத்தை எளிமையாக டிஜிட்டல் முறையில் பெறலாம். இந்த விபரத்தை அடிப்படையாக வைத்து அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள்ளோ, பயணிகள் பயணச்சீட்டை ரத்து செய்தாலோ, காத்திருக்கும் இருக்கைகளில் RAC பயணிகளுக்கு அவர்களுடைய வரிசைப்படி பெர்த் ஒதுக்கீடு செய்ய முடியும்.

மேலும், வயதுமுதிர்ந்த பயனாளிகளுக்கு இருக்கையைப் படுக்கையாக மாற்ற பரிசோதகர் கட்டணம் பெறுவதையும், டிஜிட்டல் முறையாக்குவதன் மூலம் லஞ்சம் போன்றவற்றை தடுக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செயலி விளக்கத்தின்போது கோவை நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர். உலக நுகர்வோர் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து இந்த செயலியின் விளக்கக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும், இந்த செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ரயில்வேயிடம் கோரியிருப்பதாகவும், இன்னும் 2 மாதத்திற்குள்ளாக நடைமுறைக்கு வரும் சாத்தியம் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...