ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் என்றும் உலகில் நிலைத்து நிற்கும் : கமல்

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். 

'திரு. ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்' என நடிகர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.

'ஸ்டீபன் ஹாக்கிங் மிகச்சிறந்த மனிதர். அவரின் இழப்பு பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய அறிவு மனித இனத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையாக அமையும். இந்த உலகைப்பற்றி அறிந்து கொள்ள அவரின் ஆராய்ச்சி நமக்கு உதவியாக இருந்தது. அவரின் புகழ் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும். ஸ்டீபனின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்' என பா.ஜ.க தலைவர் அமித் ஷா டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...