சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி த.பெ.தி.க., வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.ராமகிருட்டிணன் கலந்து கொண்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தொடர்ந்து சாதி, மத வேறுபாடுகளையும் விஷ கருத்துகளையும் மாணவர்களிடையே விதைக்கின்ற பாடத்திட்டங்களையும், கேள்விகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி தாளில் வர்ணாசரமத்தில் இழிவான சாதி, பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் என வினா எழுப்பப்பட்டு இதில் இழிவானவர்கள் யார் என கேட்கப்பட்டிருப்பது ஜாதி வேறுபாட்டை குழந்தைகளின் மனதில் புகுத்தும் விதமாக கேட்கப்பட்டு இருப்பது மாணவர் பருவத்திலேயே ஜாதிய வன்கொடுமையைத் தூண்டும் விதமாக அமைத்திட வழிவகுத்துவிடும். 

கடந்த காலங்களிலும் இதுபோன்று இழிவாக எழுதியுள்ளது. அதனை எதிர்த்து அந்த சமூகத்தினர் போராடி வருகின்றனர். அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒரு படத்தை வெளியிட்டு அதறக்கான காரணத்தையும் விளக்கி உள்ளனர். அதில், அம்பேத்கர் எழுதிய சட்டம் தவறாக இருப்பதாகவும், அதற்காக நேரு சவுக்கால் அடிப்பது போல படத்தை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது. இவை அனைத்தும் தலைவர்களையும், சமூகத்தையும் இழிவுப்படுத்தி நாட்டை கூறுபோட மத்தியில் ஆளும் பா.ஜ.க. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வர்ணாசரம திட்ட கொள்கைகளை புகுத்தும் இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற விஷ கருத்துகள் பரப்புகின்ற பள்ளிகளை மூட வேண்டும். புதிதாக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...