கால்நடை மருத்துவர் பற்றாக்குறை : காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை

நீலகிரி மாவட்டம் முதுமலையில் கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக காலில் காயங்களுடன் மக்னா யானை சுற்றி வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக காலில் காயங்களுடன் மக்னா யானை சுற்றி வருகிறது.



கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரியும் மக்னா யானை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒவேலி பகுதிக்கு வந்தது. அப்போது, அந்த யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதனால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக கிளன்வன்ஸ் பகுதியில் உள்ள பள்ளத்தில் நடக்க முடியாமல் நின்று வருகிறது. முன்னங்கால் இரண்டிலும் அதிக வீக்கம் உள்ளது. வன ஊழியர்கள் அந்த யானைக்கு வாழைத்தண்டு, வாழைப்பழம், தழைகளை கொடுத்து வருகின்றனர். இதனால், அந்த யானையின் உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யானைக்கு உணவு வழங்கும் வனத்துறையினர், அதற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



கடந்த 10 நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாமல் இருப்பதே சிகிச்சை அளிக்க தாமதமாவதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகின்றது. இந்த யானைக்கு கோவையில் இருந்து மருத்துவர்கள் வந்த பிறகே, சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. வனத்துறை தாமதிக்காமல் காயங்களுடன் தவித்து அந்த மக்னா யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...