மின்கம்பத்தை சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். 

ஆலாங்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பு இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் மிகவும் பழுதடைந்த நிலையில், இருந்த மூன்று மின் கம்பங்களையும் மாற்றக் கோரி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.



ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்போது, இன்னும் இரண்டு நாட்களில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நூறு குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...