ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர். கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கோத்தகிரியில் வீட்டுப் பொருட்களை வாங்கி முடித்து விட்டு பேருந்து நிலையம் சென்றார். அப்போது அங்கிருந்த பெண் மீது எதிர்பாராத விதமாக கை பட்டதாகத் தெரிகிறது.



இதை தவறாக எடுத்துக்கொண்ட அவர் திருடன், திருடன், என்று கூச்சலிடவே, அங்கு இருந்த போலீசார் முருகனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு சரமாரியாக முருகனைத் தாக்கியதாக தெரிகிறது. இரவு வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட முருகன் இரவு சுமார் 9 .30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகன் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில் எப்படி இவரை அடிக்கலாம்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் சரியான பதில் கூறாமல் முருகனை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து, முருகனின் உறவினர்கள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். 

விசாரணை என்கிற பெயரில் முருகனைத் தாக்கிய காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முருகனை அழைத்து விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தை பற்றி காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறுகையில், "காவலர்களால் தாக்கப்பட்டார் என்பது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...