சட்டவிரோத தொலைபேசி இணைப்பு தொடர்பான வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு தொடர்பான வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதிமாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன் சகோதரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பைலட் நம்பர்களில் இருந்து சைல்டு நம்பர்கள் எடுக்கப்பட்டதாகவும், சைல்டு நம்பர்களை தொலைபேசி இணைப்பாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டது.
ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகவும் யாரையும் விடுவிக்க கூடாது என்றும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவித்திருந்தது. இதனிடையே, நீதிபதி உத்தரவின் பேரில் சி.பி.ஐ. தரப்பில் எழுத்து பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்துள்ளது.
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதிமாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன் சகோதரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பைலட் நம்பர்களில் இருந்து சைல்டு நம்பர்கள் எடுக்கப்பட்டதாகவும், சைல்டு நம்பர்களை தொலைபேசி இணைப்பாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டது.
ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகவும் யாரையும் விடுவிக்க கூடாது என்றும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவித்திருந்தது. இதனிடையே, நீதிபதி உத்தரவின் பேரில் சி.பி.ஐ. தரப்பில் எழுத்து பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்துள்ளது.