மகள் சாவில் மர்மம்: விசாரணை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை: மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 

ஆவரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ரா-காளீஸ்வரன் தம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா(13).



குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா தனது மகள் பவித்ரா-வை பூ மார்கெட் அருகில் உள்ள சாரதாமணி தேவி பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைத்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று காலை சித்ரா-வை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் பவித்ராவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது பவித்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் சித்ரா என்ன நடந்தது? என்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சித்ரா, இந்த மரணத்திற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...