மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை: மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
ஆவரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ரா-காளீஸ்வரன் தம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா(13).

குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா தனது மகள் பவித்ரா-வை பூ மார்கெட் அருகில் உள்ள சாரதாமணி தேவி பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை சித்ரா-வை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் பவித்ராவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது பவித்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் சித்ரா என்ன நடந்தது? என்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சித்ரா, இந்த மரணத்திற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
ஆவரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ரா-காளீஸ்வரன் தம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா(13).

குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா தனது மகள் பவித்ரா-வை பூ மார்கெட் அருகில் உள்ள சாரதாமணி தேவி பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை சித்ரா-வை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் பவித்ராவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது பவித்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் சித்ரா என்ன நடந்தது? என்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சித்ரா, இந்த மரணத்திற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.