அடுத்த 3 நாட்களுக்கு கோவையில் மழைக்கு வாய்ப்பு - வேளாண் பல்கலை.,

அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை கோவையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- 

இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கோவையிலும் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க் கிழமை கோவையின் பல பகுதிகளில் 11 மீ.மீ முதல் 20 மீ.மீ வரை மழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வானம் மேகமூட்டத்துடனும் தூரல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 

இந்த மழையைப் பயன்படுத்தி அடுத்த அறுவடைக்கு விவசாயிகள் தயாராகலாம். மரங்களுக்கு பாத்தி கட்டுவதன் மூலம் 250 முதல் 300 லிட்டர் வரை நீர் கிடைக்கும். கொய்யா, தென்னை, சப்போட்டா மற்றும் மாம்பழம் போன்ற மரங்கள் பெரிதும் பயன்பெறும்.

வெப்ப நிலையைப் பொறுத்தவரை கோவையில் இரவு நேரங்களில் 22.5 டிகிரி செல்சியஸ் வரையும், பகல் நேரங்களில் 32 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாநகரப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...